இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம்

PEACE PERSEVERANCE POWER

Tuesday 10 May 2011

கோட்டக்குப்பத்தில் மின் வாரியத்தை கண்டித்து தாமுமுக ஆர்பாட்டம், IIS பங்கேற்ப்பு!


கோட்டக்குப்பத்தில் மின் துறை மெத்தன போக்கில் செயல்படுகிறது. மேலும் கோட்டகுப்பம் மக்கள் மின் வாரியத்தால்  பல இடையுர்களுக்கு ஆளாகிறார்கள், சரியான மின்சார விநியோகம் இன்றி , தொடர் மின் தடைகள், மின் கட்டண வசூல் இழுத்தடிப்பு, கம்ப்யூட்டர் கொலற்படி செய்து அபராதம் விதித்தல், துணை மின் நிலையம் இல்லாமல் மின்சார பற்றாக்குறை. இதற்காக பல போரட்ட்களும் , பலர் சிறை சென்றும் பயன் இல்லாமலேயே இருக்கிறது. கடந்த வாரங்களில் மட்டும் பலமுறை மின் தடை மற்றும் மின் வாரியத்தால் பல பிரச்சனைகள். இதனை கண்டித்து நேற்று (09.05.2011) தாமுமுக சார்பில்  நடந்த ஆர்பாட்டத்தில் இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம் (IIS) உறுப்பினர்கள் பங்கேற்று  ஆதரவளிதனர். இது குறித்து IIS தலைவர் Aziz  கூறுகையில் : "உறக்க ஒலித்தால் தான் ஊர் ஒளிரும்" , ' ஊர் நலனுக்காகவும் சமுக நலனுக்காகவும் குரல் கொடுப்போர்களுக்கு நாங்கள் என்றும் தோல் கொடுப்போம், அதன் அடிப்படையில் நாங்கள் இன்று தாமுமுக சார்பில்  நடந்த ஆர்பாட்டத்திற்க்கு ஆதரவளித்தோம்.' என்று கூறினார். ஆர்பாட்டத்தில் இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம் (IIS) தலைவர் Aziz, செயலாளர் Rizwan Ahamed, துணை செயலாளர் Basith  உறுப்பினர்கள் Moideen, Azar, Abdul Rahim, Anis மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More