இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம்

PEACE PERSEVERANCE POWER

Friday 29 April 2011

குஜராத் கலவரம்-மோடி மீது உளவுத்துறை அதிகாரி பரபரப்பு புகார்

டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத் முழுவதும் 1200க்கும் அதிகமானோரை பலிவாங்கிய மதக் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குள்ளது என மூத்த உளவுத்துறை போலீஸ் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கலவரம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து மோடியின் மீது இந்தப் புகாரைக் கூறியுள்ள போலீஸ் அதிகாரியின் பெயர் சஞ்ஜீவ் பட். 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த கலவரம் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தான் அளித்த பிரமாணப் பத்திரத்தில் இதனைத் தெரிவித்துள்ளார் பட்.

அவர் மேலும், "நான் உள்பட 8 போலீஸ் அதிகாரிகள் மோடியின் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது மோடி, மதக் கலவரத்தில் நடுநிலைமை காப்பது அவசியம் என்றாலும், இந்த முறை நிலைமை அப்படியில்லை. இனி இப்படியொரு கலவரம் நடக்கக் கூடாது எனும் வகையில் முஸ்லீம்களுக்கு கட்டாயம் பாடம் கற்றுத் தரவேண்டும். இந்துக்கள் மிகுந்த கோபத்திலும் ஆத்திரத்திலும் உள்ளனர். அந்த ஆத்திரத்துக்கு வடிகால் அவசியம்," என்றார். நான் இதை கலவரம் குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு படையிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தக் கூட்டத்தில் சஞ்ஜீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

முதல்வர் நரேந்திர மோடியிடம் இந்தக் கலவரங்கள் குறித்து கடந்த ஆண்டு இரு தினங்கள் விசாரணை மேற்கொண்டது சிறப்பு புலனாய்வு குழு. அப்போது தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மோடி மறுத்தது நினைவிருக்கலாம்.

Thursday 28 April 2011

ஒரு நிமிடம்....!

தமிழ் வழி கல்வி....!
தான் தரணி ஆழ தமிழனை இறையாக்கும் தமிழ் இன தலைவர்களின் தந்திரம்....!
தமிழன் குன்ற சட்டியில் குதிரை ஒட்டியது போதும்; உன் புகழ் ஊர் அல்ல உலகறிய வேண்டும்...!

உண்மையை சொன்னால் கசக்கும்...! நீ உயர்ந்தால் சில தலைவர்களுக்கு வலிக்கும்....!

இலவசம் தந்து உன்னை எமளியாக்கியவர்கள்....
உன்னிடம் இருப்பதை கொண்டு உன்னை உயரவைக்கவில்லையே...!

மேன்னாட்டு முதலீடாரை காசு வாங்கிக்கொண்டு, தமிழ் நாட்டை நந்த அரசு....

அங்கே வேலை வாய்பிற்கோ ... தமிழ் வழி கற்று வந்த தமிழனுக்கு தனி இடம் வேண்டாம்;
ஓர் தரை இடம் கூட வாங்கி தர முயலாதது ஏன்.....?

இவர்களின் சதிகளை சொல்லிகொண்ட போலாம்....

தமிழா முழிச்சிக்கோ...! தந்திர வலையில் இருந்து மீண்டு வா........!
பாரதம், கரகம் , கபடி...... போன்ற பல கலைகளை, உன் தனி திறமையை வளர்பதற்க்காக கற்றுக் கொள்கிறாய்;
அதை போல்.... பிற மொழிகளையும் உன் வளர்சிக்காக கற்றுக்கொள்...!

தமிழ் வழி கல்வி கற்று வயிற்றை கழுவதற்கு நாம் ஓலை சுவடி காலத்தில் இல்லை....

ஓவியம் தீட்டவே கணிப்பொறியை நாடும்.... கணினி யுகத்தில் இருக்கிறோம்....!

ஆங்கில வழி கல்வி தவரே அல்ல...

தமிழன் உலகிற்கே சவால் விட உதவிடும் கருவியாக,
ஆங்கில வழி கல்வியை ஏற்றுக்கொள்....! உன்னையே நீ உயைர்த்திக்கொள்...!

தமிழ் நாட்டின் தறுதலை தலைவர்களே....!

தமிழன் எழுந்து விட்டான்.....
தங்களின் தந்திர வலையில் இருந்து மீண்டு விட்டான்.....!

இனி....

எங்கள் ஆட்டம்..... உண்மையான தமிழர்களின் ஆட்டம்...!

-ரியாஸ் அஹமத் . அ

Wednesday 27 April 2011


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More