இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம்

PEACE PERSEVERANCE POWER

Tuesday, 31 May 2011

செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!

 ரியாத்: செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை...

Saturday, 21 May 2011

இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம் சின்னம் வெளியீடு!

கோட்டகுப்பம்: இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை (20.05.2011) தங்களின் சின்னத்தை வெளியிட்டனர். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடின முயற்சிக்கு பிறகு அமைப்பின் சின்னத்தை வெளியிட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஊர் நலனுக்காகவும், சமுதாய நலனுக்காகவும் மற்றும் சமுக முன்னேற்றத்திற்க்காகவும் உழைதிடுவோம். சமுக முன்னேற்றத்திற்க்கு கல்வி முக்கியம் என்பதால், கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி சார்ந்த நல பணிகளை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறோம்,...

15 அடிக்கு 10 அடி அறையில் முடங்கியது கனிமொழியின் வாழ்க்கை!

டெல்லி: திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சொகுசான, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கனிமொழி தற்போது 150 அடி அளவேயான குறுகலான அறையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கனிமொழி திஹார் சிறையின் மகளிர் சிறைப் பிரிவில்...

Friday, 13 May 2011

அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மிக அதிக அளவாக 78.80 சதவீதம் வாக்குகள் பதிவாயின. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 204 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150 தொகுதிகளில் வென்றுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 234 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று நள்ளிரவு வாக்கில் தெரிய வந்தன. அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்): அதிமுக-...

Tuesday, 10 May 2011

கோட்டக்குப்பத்தில் மின் வாரியத்தை கண்டித்து தாமுமுக ஆர்பாட்டம், IIS பங்கேற்ப்பு!

கோட்டக்குப்பத்தில் மின் துறை மெத்தன போக்கில் செயல்படுகிறது. மேலும் கோட்டகுப்பம் மக்கள் மின் வாரியத்தால்  பல இடையுர்களுக்கு ஆளாகிறார்கள், சரியான மின்சார விநியோகம் இன்றி , தொடர் மின் தடைகள், மின் கட்டண வசூல் இழுத்தடிப்பு, கம்ப்யூட்டர் கொலற்படி செய்து அபராதம் விதித்தல், துணை மின் நிலையம் இல்லாமல் மின்சார பற்றாக்குறை. இதற்காக பல போரட்ட்களும் , பலர் சிறை சென்றும் பயன் இல்லாமலேயே இருக்கிறது. கடந்த வாரங்களில் மட்டும் பலமுறை மின் தடை மற்றும்...

Page 1 of 41234Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More